ரணிலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த வட மாகாண முதலமைச்சர்

wigneshwaranஇலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை நியாயப்படுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார்

இந்திய செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நட்பு நாடு தொடர்பில் ஒரு நாட்டின் தலைவர் கூறியுள்ள கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனைவிடுத்து பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை கூறக்கூடாது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து சென்றதன் பின்னர் முதலமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: