இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய பிரதமர்

modi_my3_002உலகில் பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும் இலங்கை விஜயத்தின் போது இலங்கையிலும், அந்நாட்டு மக்களிடமும் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பிணைப்பை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பும், விருந்தோம்பலும் தனக்கு விசேடமான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் இருநாள் விஜயத்தின் முடிந்து நாடு திரும்புவதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு வழங்கிய இராப்பேசனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://www.youtube.com/watch?v=KJ1J6A7YAyk&feature=player_embedded&list=PLBG6UuYpOcTvrzhRp_R_4zDL5qU4RJk2X

TAGS: