விடுதலைப் புலிகளைகளை முடக்கிவிட்டதாக சிறிலங்கா தெரிவிப்பு

ajithpereraதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச ரீதியாக முடக்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமர் அனுப்பி கடிதத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளது.

இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விடுதலைப் புலிகளால் சுயமாக இயங்கமுடியாது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக அரசாங்கம் முடக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: