புலம்பெயர் தமிழர்களின் பினாமி என்று விக்கினேஸ்வரனை அழைக்க ஆரம்பித்துள்ளது சிங்களம் !

vvvசமீபகாலமாக இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகள் , வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை குறிவைக்க ஆரம்பித்துள்ளாகள் என்று கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள , ஈழத் தமிழர்களின் பினாமி தான் விக்கினேஸ்வரன் என்றும் , புலிகள் ஆதரவாளர்கள் கூறும் விடையங்களையே அவர் தனது கருத்தாக தெரிவித்து வருவதாகவும் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்தியாவும் அதிருப்த்தியடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

சமீபகாலமாக விக்கினேஸ்வரன் தெரிவித்து வரும் கருத்துகள் சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் வட கிழக்கில் உள்ள மக்களின் உண்மை நிலையைதான் விக்கினேஸ்வரன் தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. இருப்பினும் இதனை சிங்களப் பேரினவாதிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

முதல்வருக்கு புலி முத்திரை குத்தி அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒதுக்கும் ஒரு கட்ட நடவடிக்கை தற்போது முடிக்கிவிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

-http://www.athirvu.com

TAGS: