மைத்திரியின் சொல்லை நிறைவேற்றிய இலங்கை கடற்படை! 33 இந்திய மீனவர்கள் கைது!

fisher manஇலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் எனவும் படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் நாகையில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன் படியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்து 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: