ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை முன்னிலைப்படுத்தும் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து வியப்படைகிறேன் – ஜோன் கெரி

john_kerry_1சிறிலங்காவில் இன்னும் பல விடயங்கள் தீர்க்கப்படாதிருப்பதாக, அமெரிக்கராவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இருந்து விடைபெறுவதற்கு முன்னதாக அமெரிக்க தூதுரக அதிகாரிகளை சந்தித்திருந்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த விஜயம் குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், ஐக்கிய நாட்டுக்குள்ளான தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலைப்படுவது குறித்து தாம் வியப்படைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீர்க்கப்படாதுள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டால் மாத்திரமே எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: