ஜோன் கெரியின் விஜயம் யுத்தக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யுமா? – சர்வதேச ஊடகம் சந்தேகம்

john_kerry_1ஜோன் கெரியின் சிறிலங்கா விஜயம், சர்வதேச யுத்துக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யும் அபாயம் இருப்பதாகஎச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அவர் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த போது, சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைக்கு சிறிலங்காவை வலியுறுத்துவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அவர் உள்நாட்டு விசாரணை குறித்தே அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

உள்நாட்டு விசாரணைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறி இருந்தார்.

எனினும் இந்த விடயம், உள்நாட்டு பொறிமுறைகளுடன் சர்வதேச யுத்தக்குற்ற விசாரணையை மட்டுப்படுத்திவிடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: