பொதுமக்கள் வாழும் பகுதியிலிருந்து படையினரை வெளியேற்ற முடியாது: ரஞ்சினி நடராஜபிள்ளை

jaffna-poமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கிவாழும் பகுதிகளில் இருந்து படையினரை வெளியேறுமாறு நாங்கள் கேட்க முடியாது. என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின்போது, மீள்குடியேற்ற பகுதிகளில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்த்து அவர் பதிலளித்தபோது, படையினரை வெளியேறுமாறு நாங்கள் கேட்க முடியாது.

யாழ் நகர் பகுதியில் படையினருடன் மக்கள் வாழவில்லையா? என கேள்வி எழுப்பிய அவர் படையினரை வெளியேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: