நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்ற திமுக நிர்வாகி தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
அந்த கோயிலில் நடுவில் யானையும், இடது புறத்தில் காவல் தெய்வம் அய்யனாரும், வலது பக்கத்தில் குதிரையை பிடித்த படி, கையில் துப்பாக்கியுடன் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கம்பீரமாக இருக்கும் சிலையை வைத்துள்ளார்.
மேலும், இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார்.
இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலை! தமிழக அரசு அதிரடி
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கோவில் வைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிலை இரவோடு இரவாக தமிழக அரசால் அகற்றப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ம் திகதி கிராமத்தினர் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.
கோயிலின் தெற்கு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு குதிரை சிலைகளை வடிவமைத்தனர்.
அதில், ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர்.
தன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்து தாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம் என்று கிராமத்தினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் இந்த தகவல் உளவுத்துறையினரால் மேலிடத்திற்கு சென்றதால் நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு சென்ற காவல்துறையினர், பிரபாகரனின் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் அதிரடியால் கிராம மக்கள் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றியுள்ளனர்.
கோவில் திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-http://www.newindianews.com




























தமிழர் அவர்தம் சமய நெறி அறியாமல் மனம் போன போக்கிர்க்கெல்லாம் மதம் என்ற பெயரில் “மதம்” பிடித்து ஆடுவது ஒரு பொழுது போக்கு அதில் இது ஒன்று.
தன்னை காப்பாற்றியவனை சாமி என்று சொல்வது தமிழர்களின் வழக்கம்.மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழமக்களை பல ஈழ மக்களை பாதுகாத்து ஆட்சி செய்தது உலகமே அறியும்.இன்று அவரில்லாமல் அங்குள்ள மக்கள் படும் துன்பத்தையும் நாம் அறிகிறோம்.இப்ப சொல்லுங்கள் தலைவரை சாமியாக சிலர் நினைப்பதில் தவறு உண்டா?
இராம கோபாலன் மட்றும் சங்கராச்சியாரை குப்பிட்டு இந்த சிலைக்கு ஒரு பூஜையை போடா சொல்லு
உயந்தவர்களை போற்றுவதில் தப்பில்லை. அதற்குறிய முறையில் செய்வதே முறை. மனிதரும் தெய்வமாகலாம் அறவழியில் நின்றால். இது தமிழரின் சமய நெறி.
உலகில் வாழும்போது போற்றும் வார்த்தைகள் விட ஒருவனுக்கு இறந்த பிறகு தொடர் புகழ் கிட்டுவதே மேல்.