இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா!

kajna_jaffna_001யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுவதாக படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் குறித்த போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் போதைப்பொருளை இறக்கிக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: