அடுத்து வரும் அரசாங்கத்துடன் அனைத்துலக ஆதரவோடு எமது பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் மாவை!

mavai-senathirajahதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனவிடுதலைப் பிரச்சினை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்பதற்கு எமது மக்கள் நம்பிக்கை வைத்து எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்து வரும் அரசாங்கத்துடன் அனைத்துலக சமூகத்தின் ஆதரவோடு எனது பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என்ற வாக்குறுதியைக் கொடுத்து அதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இன்று நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம் என மாவை சேனாதிராஜா மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

-http://www.pathivu.com

https://youtu.be/IlgsdHqJvEw

TAGS: