உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் குடிநுழைவுத் துறையின் பயணக் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள டிஏபி சீபூத்தே எம்பி தெரேசா கோக்கும் பிகேஆர் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லியும் வெளிநாடுகள் செல்ல தடையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
வான் ஜுனாய்டி தம்மிடம் இதைத் தெரிவித்ததாக கொக் மலேசியாகினியிடம் கூறினார். ஆனால், கொக் கிழக்கு மலேசியாவுக்கு மட்டும் செல்ல முடியாது. கிழக்கு மலேசியா சொந்த குடிநுழைவுச் சட்டங்களைக் கொண்டிருக்கிறது.
ரபிஸியைப் பொருத்தவரை அவர் சரவாக்கில் மட்டும்தான் தடை செய்யப்பட்டிருக்கிறார். சாபாவுக்கும் மற்ற வெளிநாடுகளுக்கும் செல்லத் தடை ஏதுமில்லை.
மலேசியாகினி இதை உறுதிப்படுத்திக்கொள்ள வான் ஜுனாய்டியைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.
தடைக்கான சரியான காரணத்தை மக்களுக்கு அறிவிப்பது அமைச்சரின் பொறுப்பு. அரசியல் ஆதாயத்துக்காக / நோக்கத்தில் தடை விதிப்பது மக்கள் உரிமையை மீறுவதாகவே கரு கொள்ளப்படும்!!! 1963 ஒப்பத்திற்குப் பிறகு, நாம் மலேசியனாகவே வாழ்வோம். கிழக்கு மலேசியன் மேற்கு மலேசியன் என்று பிரித்து வாழ்வதில் ஒப்பந்தத்தின் அர்த்தமும் இல்லை. வாழ்வோம் மலேசியனாக!!!