எப்படி கொலை செய்யவேண்டும் என்று பாடம் எடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்: 13 வயது சிறுவனின் வாக்குமூலம்

how_tokill_001பணையக்கதிகளை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று சிறுவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுப்பு எடுத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீப காலமாக சிறுவர்கள் மூலமாக படுபயங்கர கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் விதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஐ.எஸ் அமைப்பினரிடம் இருந்து தப்பி வந்துள்ள தாகா என்னும் 13 வயது சிறுவன் தெரிவித்துள்ளதாவது, வடக்கு ஈராக்கில் உள்ள எங்கள் கிராமத்தில் இருந்து நான் உட்பட 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடத்திவரப்பட்டு அவர்களின் ஜிகாதி பள்ளியில் சேர்க்கப்பட்டோம்.

அங்கு 7 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் இருந்தனர். அங்கு அவர்கள் எங்களுக்கு எப்படி கொலை செய்யவேண்டும் என்று கத்துகொடுத்தனர்.

மேலும் கொலை செய்யும் போது கழுத்தின் எந்த பகுதியில் கத்தியால் அறுத்தால் விரைவாக உயிர் போகும் என்றும் அவர்கள் கற்றுகொடுத்தனர்.

மேலும் எங்களை ஒத்திகை செய்து பார்க்கும்படியும் அவர்கள் கட்டாயப்படுத்தினர். நாங்கள் மறுத்தால் எங்களை அடித்து கொடுமைபடுத்தினர்.

அங்கு எங்களுக்கு ஷாரியா சட்டம் மற்றும் குரான் பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது.

மேலும் நாங்கள் ரோம் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்றும் அமெரிக்கா போன்ற நாடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் வகுப்பெடுத்தனர் என்று தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் சிறுவர்களுக்கு கொலை செய்ய கற்று தரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் பலத்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com