ஐநா மனித உரிமைகள் அறிக்கை 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

UNHRCயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கை இம்மாதம் 20ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த அறிக்கை இரகசிய ஆவணமாக தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் அது தொடர்பாக சர்வதேசம் ஏற்றுக்கொள்ளளும் தரத்துக்கு ஏற்றாற்போல் தேசிய பொறிமுறையொன்றின் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்ளும் என்று தெரியவருகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: