‘இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது’

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று இலங்கையின் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ச பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

wijedasa
‘இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது’

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதி எவரும் சிறைகளில் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூட வெடிகுண்டு வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, அவர்களை அரசியல் கைதிகள் என கருத முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், விடுதலைப்புலிகள் என்ரு சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அரசியல் கைதிகளாகத்தான் கருத வேண்டும் சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா பிபிசியிடம் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: