யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரணில் விக்கிரமதலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட சற்று கூடுதலான வாக்குகளுடன் முன்னணியில் இருந்து வருகிறது.
இதனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டைஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்று என்ன பயன் .நீ எங்களின் அடிமை என்பது மாற்ற முடியாது.சிங்கலவர்கள்தான் இலங்கையின் ஆட்சி பீடம்.
அடேய் !சமரசிங்கே ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்m வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஆணவம் வேண்டாமடா சிங்கள நா……….யே