இலங்கை: யாழ். மாவட்டத்தின் 11 தொகுதிகளையும் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!

tna_colombo_1யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

tna_logoரணில் விக்கிரமதலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட சற்று கூடுதலான வாக்குகளுடன் முன்னணியில் இருந்து வருகிறது.

இதனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன.

இம்மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டைஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: