உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என மக்கள் கூறுவதில் தவறில்லை!- ஆர்.சம்பந்தன்

sampanthan_r_010இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று மக்கள் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை மற்றும் மூதூர் 17 பேர் கொலை போன்றவை தொடர்பில் உதாலகமவின் தலைமையில் உள்ளுர் விசாரணைகள் இடம்பெற்றன.

எனினும் அதன் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. அவை ஒளிக்கப்பட்டு விட்டன.

இந்தநிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்ற உள்ளக விசாரணையை எவ்வாறு மக்கள் நம்புவர் என்று சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியாகவுள்ளது.

இதன்பின்னர் உள்ளக விசாரணைகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகலாம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: