இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

fishermen_protests_001இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனை நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: