தமிழ் சமூகத்தை அழிக்க அரசியல் சதிவேலைகள் அரங்கேற்றம்: சி.வி.விக்கினேஸ்வரன் !

vikkதமிழரை கீழ் நிலை சமூகமாக மாற்ற திட்டமிட்ட சதிவேலைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் சொத்தான கல்வியை வேருடன் அழிக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு போதைப் பொருள் பாவனை திட்டமிட்டு அதிகரிக்கப்படுவதாகவும் கூறினார். எம்மை கையாலாகாதவர்கள் ஆக்கி அடிமைச்சீவியம் நடத்தும் கீழ் நிலை சமூகமாக மாற்ற அரசியல் சதிவேலைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

சிறந்த பழக்கவழக்கம் பண்பாட்டுடன் காணப்பட்ட பண்பட்ட எமது சமூகத்தில் இன்று கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் என்பன அதிகரித்து காணப்படுவது இதனாலேயே என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இவ்வகையான சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த சில குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.athirvu.com

TAGS: