தம் மீது எவ்வாறான பழிச்சொற்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் அதற்காக கவலைப்பட போவதில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதித்துறையை அடுத்து ஆன்மீகத்துடனும் இலக்கியத்துடனும் மூழ்கியிருந்த தாம், வலுக்காட்டாயமாக இழுத்து வரப்பட்டு தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போது கட்சியில் ஒருவர்-இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என குறிப்பிட்டார்.
அத்துடன் குறைநிறைளை சுட்டிக்காட்டினால், தன்னை எதிர்ப்பு அரசியல்வாதியென கூறுவதாகவும், தாம் அரசியல்வாதியோ கட்சி சார்ந்தவனோ இல்லையெனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நிதிகள் வடக்கு மாகாண சபையினூடாக வருவதில் இருந்த சிக்கல் நிலை, தற்போதைய ஆட்சியில் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilcnnlk.com