யூதர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

jews_is_01உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்கபோவதாக எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் யூத தம்பதியை படுகொலை செய்தனர்.

இதனால் பாலஸ்தீனத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த 10 பேரும் பாலஸ்தீனத்தை சேர்ந்த 48 பேரும் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யூதர்களை மூற்றிலும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் தோன்றும் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன், முஸ்லிம்களின் முதல் எதிரியான யூதர்களுக்கு இது முக்கியமான எச்சரிக்கை.

எங்கள் நிலத்தை அபகரித்த யூதர்கள் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்று தான். உண்மையான யுத்தம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இதற்கு முன்னால் நீங்கள் பார்த்தது அனைத்துமே சாதாரணமானவையே.

நாங்கள் உங்களை நெருங்குவதற்கு முன்பு நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று ஆசை படுகிறீர்களோ செய்துகொள்ளுங்கள்.

விரைவில் ஒரு யூதர் கூட ஜெருசலேமில் இருக்கமாட்டார்கள். ஏன் இந்த உலகிலேயே இல்லாமல் செய்வதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். அமைப்பினர் பிரித்தானியாவை விட நிலப்பரப்பில் சிறிதளவு அதிகமான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com