சோபித தேரரின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அஞ்சலி

maduluwawe-sobitha-theroதேசிய ஒற்றுமைக்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இறுதிவரை அயராது உழைத்த வணக்கத்துக்குரிய சோபித தேரரின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன ஒற்றுமைக்காக தன்ன அர்ப்பணித்து பணியாற்றிய சோபித தேரர், சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் அஞ்சாது குரல் கொடுத்து வந்த சோபித தேரரின் இழப்பு பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

தேரர் விடடுச்சென்ற பணியை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்வது ஒன்றுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

வணக்கத்துக்குரிய தேரரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நாட்டு மக்களுடன் நாமும் எங்களுடைய துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய நாம் சிரம் தாழ்த்திப் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

-http://www.tamilwin.com

TAGS: