துணைப் பிரதமர்: நூருல்- சூலு ‘இளவரசி’ சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் தியான் சுவா

meetலெம்பா  பந்தாய் நாடாளுமன்ற  உறுப்ப்பினர்  நூருல்  இஸ்ஸா  அன்வாரும்  காலஞ்சென்ற  சூலு  சுல்தானின்  புதல்வி  ஜேசெல் எச் கிராமும்  சந்திப்பதற்கு  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவாதான்  ஏற்பாடு  செய்தாராம்.

“அவர்களின்  சந்திப்புக்கு  ஏற்பாடு  செய்தவர்  தியான்  சுவா”, என  துணைப்  பிரதமர்  அஹ்மட்   ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

“சாபாவில்  இழந்த  தனது  பிரதேசங்களைத்  திரும்பப்  பெற  முயலும்  சூலு  சுல்தான்  பரம்பரையினர் என்று  கூறிக்கொள்வோருடன்  அந்த  இரகசிய  சந்திப்புக்கு  ஏற்பாடு  செய்தவர்  தியான்  சுவா”, என்றாரவர்.

மலேசிய  பாதுகாப்புப்  படைவீரர்களில்  பலரின்  இறப்புக்கு  சாபாவில்  நிகழ்ந்த  சூலு  ஊடுருவல்தான்  காரணம்  என்கிறபோது  சூலு  இளவரசியை  நூருல்  சந்தித்தது  கடுமையாகக்  குறைகூறப்பட்டது. அதற்காக  நூருல்  வருத்தம்  தெரிவித்துக்  கொள்ள  வேண்டியதாயிற்று.