ஜனவரி இறுதியில் போர்க்குற்ற விசாரணை! – நீதி அமைச்சர் தகவல்

channel4மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு – செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பற்கும் அரசு உத்தேசித்துள்ளது என்று என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை நிறைவுக்கு வந்த பின்னர், உள்ளகப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு உள்ளிட்ட உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ – மூன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஆகியோர் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் எனத் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இவர்களது விஜயங்களுக்கு முன்னரே உள்ளகப் பொறிமுறை விடயங்களை செயற்படுத்த அரசு வரவு – செலவுத் திட்டத்திற்கு அடுத்த பணியாக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-http://www.tamilwin.com

TAGS: