இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான தீர்வுத் திட்டம் வேண்டும்!- சுரேஸ் பிரேமச்சந்திரன்

suresh_premachandranஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பொது மக்களே பதில் கூறவேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது இதுவரை எவருக்கும் தெரியாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்ற பட்சத்தில் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

மக்களுடன் கலந்துரையாடியே தீர்வுத் திட்டம் வரையப்படும். என்று கூறினார்.

அத்தோடு அவ்வாறான ஒரு தீர்வு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இதுவரை முன்வைக்கவில்லை.

கூட்டமைப்பு ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்காததால் தான் இனப்பிரச்சினை தொடர்பில் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: