இந்திராவின் நிலை யாருக்கும் ஏற்படலாம்: துணை அமைச்சர் எச்சரிக்கை

saraஒரு தாயான    இந்திரா   காந்திக்கு   ஏற்பட்ட    நிலைமை   இந்நாட்டில்    இன, சமய வேறுபாடின்றி   யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என இளைஞர், விளையாட்டுத்துறை   துணை   அமைச்சர்     எம். சரவணன் கூறினார்.

“நமது   நீதிமுறை    அப்படியுள்ளது,   அதனால்    தாயைப்    பிள்ளைகளிடமிருந்து   பிரிக்கும்   ஒரு   முடிவை   ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக    இருக்கிறோம்.

“இது ஒரு   இந்து தாயாரும்   ஒரு முஸ்லிம்   தந்தையும்   சம்பந்தப்பட்ட   பிரச்னை   என்று மட்டும்   நினைக்க வேண்டாம்.

“இதுவே ,    எந்த இனத்தைச்   சேர்ந்தவருக்கும்    எந்தச் சமயத்தைச்   சேர்ந்தவருக்கும் ஏற்படலாம்”,     என சரவணன்    இன்று   கோலாலும்பூரில்   கூறினார்.

இவ்விவகாரத்தில்   மலேசியர்கள்    இன, சமய வேறுபாடின்றி    இந்திராவின்பால்    பரிவு கொண்டிருப்பதை   அரசாங்கமும் நீதிமன்றங்களும் உணர வேண்டும் என்றும்    அவர்   சொன்னார்.