பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் இலங்கைக்கு அதிக உதவி! பிரித்தானிய அறிவிப்பு

hugo_swire_001இலங்கையின் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர் இதனை தெரிவித்ததார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான முயற்சியை பிரித்தானியா வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் வதிவற்ற பாதுகாப்பு அலுவலர் நிலை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதேவேளை பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

எனினும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் பிரித்தானியா இலங்கைக்கான தமது உதவிகளை அதிகரிக்கும் என்றும் ஸ்வைர் உறுதியளித்தார்.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் தற்போது வலுவற்ற சட்டம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com
TAGS: