இலங்கையின் வன்னியில் இந்திய இராணுவக் குழு

இலங்கையின் வன்னிப் பகுதியை நேற்று இந்திய இராணுவக் குழு சென்று பார்வையிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய வான் படையின் என்.ஆர். நவால்கர் தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு, இலங்கையில் ஆறு நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

 இதன் ஒரு பகுதியாக நேற்று, வன்னிப் பகுதிக்குச் சென்று அக்குழு பார்வையிட்டது. கடந்த 2009-ல், இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் வன்னிப் பகுதிதான் மையமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் உள்ள இலங்கை இராணுவ கல்லூரி, மறுவாழ்வு ஆணையர் அலுவலகம், பழமை வாய்ந்த, மத ரீதியிலான புகழ்பெற்ற இடங்கள் ஆகியவற்றுக்கு இக்குழு சென்றது. இதையடுத்து, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுடன் இந்திய இராணுவக் குழு ஆலோசனை நடத்தியது.

TAGS: