பிரித்தானிய மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது.
அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் பிரித்தானிய மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக வழங்கியது.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வைரம் பிரித்தானிய மகாராணியின் கிரீடத்திலேயே இருந்து வருகிறது.
இந்த வைரத்துக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவும் உரிமை கோரி வருகிறது.
மேலும் இந்தியாவுக்கு மீண்டும் இந்த வைரத்தை கொண்டுவரவேண்டும் என்ற கொரிக்கையும் வலுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சட்டம் படித்த வழக்கறிஞரான ஜாவெத் இக்பால் ஜஃப்பெரி என்பவர் இது தொடர்பாக லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதலில் இந்த வழக்கை ஏற்க மறுத்த நீதிபதி தற்போது மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார்.
மேலும் கோஹினூர் வைரம் சட்டப்பூர்வமாக எடுத்து செல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள ஜாஃப்பெரி கூறியதாவது, ரஞ்ஜித் சிங்கின் பேரனான தலிப் சிங் பஞ்சாபை ஆட்சி செய்துகொண்டிருந்த போது ஆங்கிலேயர்கள் இந்த வைரத்தை பறித்து சென்றுள்ளனர்.
14 வயது சிறுவனான ரஞ்ஜித் சிங்கை மிரட்டி அவர்கள் இதனை செய்துள்ளனர். மேலும் அப்போது கிழக்கு இந்திய கம்பெனி தான் பஞ்சாபை ஆட்சி செய்துகொண்டிருந்தது.
ஒரு கம்பெனி எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும். இதனை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்
நீண்ட நாட்களாகவே இந்தியா கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானும் உரிமை கோரியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com