சிறுவர்கள் முன்னிலையில் கைதியின் தலையை வெட்டி கொலை செய்த ஐ.எஸ்.: அதிகரித்துவரும் மரண தண்டனைகள்

head_cut_001குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைதி ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை வழங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

.குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

கொலை, கற்பழிப்பு, உளவு போன்ற செயல்களில் இடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும், திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கையை வெட்டுதல் போன்ற தண்டனையும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதி ஒருவரை நாற்காலியில் உற்காரவைத்தப்படி அவரது தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிரியா தலைநகர் ரசாக் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் சுமார் 3 அடி நீளமுள்ள வாள் மூலம் அவரது தலையை தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர்.

எனினும் அவர் செய்த குற்றம் என்ன என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதே போன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மற்றொரு கைது ஒருவரின் கையை வெட்டும் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த தண்டனை சட்டத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரம் பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களை கல்லால் அடித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே, ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள சிரியா, ஈராக், மற்றும் தலிபான் தீவிரவாதிகள் வசமுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களை கல்லால் அடித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை வழங்கி உள்ளனர்.

ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த புதன்கிழமை அன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் ரெய்டு நடத்தியபோது ஒரு இல்லத்தில் 4 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிடித்திருக்கின்றனர். மேலும், தங்களது வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்களை, ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தி, அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள் அப்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும்படி மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து இருக்கின்றனர். இதனையடுத்து, பெரும் திரளாக கூடி இருந்த மக்கள் முன்பாக, அந்த 4 பெண்களையும் அவர்கள் கல்லால் அடித்து படுகொலை செய்திருக்கின்றனர்.

-http://www.athirvu.com

கொலை செய்வது போல் விளையாடும் சிறுவர்கள்: குழந்தைகளையும் தீவிரவாதியாக மாற்றும் ஐ.எஸ்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை போன்று படுகொலை செய்யும் விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்கள் முன்னிலையிலேயே  கொடூரமாக கொலை செய்வது மட்டுமில்லாமல் அவர்களையும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சிறுவன் ஒருவன் மூலம் காரை வெடிக்க செய்து பணையக்கைதிகளை தீவிரவாதிகள் கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஈராக் , சிரியா போன்ற பகுதிகளில் இருக்கும் சிறுவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளை போன்று கொலை செய்வதையே விளையாட்டாக விளையாடுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், நான்கு சிறுவர்கள் முழங்கால் போட்டப்படி உள்ளனர்.

அவர்களுக்கு பின் உள்ள சிறுவன் , ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறுவதை போன்று, இந்த பாவங்செய்தவர்கள் ஈராக்கின் ஐ.எஸ். நாயகர்களால் கொலை செய்யப்படுகின்றனர் என்று கூறுகிறான்.

பின்னர் தன்னிடம் உள்ள பொம்பை துப்பாக்கியால் அவர்களை சுடுவது போல் வீடியோ முடிவு பெறுகிறது. இந்த வீடியோவை ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறுவர்கள் கூட தீவிரவாதிகளாக மாற்றும் ஐ.எஸ். அமைப்பினரின் செயலுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

-http://world.lankasri.com