துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு

turuke001துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவத்துக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு தானியார் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சுமார் 28 பேர் பலியாகியுள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீவிரவாதத்தின் வெறுக்கத்தக்க செயல் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எந்த அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். அல்லது குர்தீஷ் புரட்சிப்படையான பி.கே.கே. ஆகிய அமைப்புகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

-http://www.tamilwin.com