சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றிலிருந்து விடுபடும் ஏதுநிலை நல்லாட்சியில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்

shivashakthi_anan_1தமிழ் மக்கள் தங்களை அரசியல் அனாதைகளாகவே நினைக்கின்றார்கள். அவர்கள் சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றிலிருந்து விடுபட கூடியதான ஏது நிலை எதுவும் இந்த நல்லாட்சியில் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு யாப்பு உருவாக்கம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச அளவிலும் கைவிடப்பட்ட ஒரு அரசியல் நிர்க்கதியிலேயே உள்ளனர்.

அவர்கள் யாரையும் நம்பும் நிலையிலும் இல்லை. எந்த சிங்கள தலைவர்களையும் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பும் நிலையிலும் இல்லை.

ஏனெனில் சிங்கள தலைவர்கள் பல்லினங்களில் அனைவரையும் அரவணைத்து வழிநடத்தும் அரச சிற்பிகள் என்று எந்தவொரு சிங்கள தலைவரும் இருந்தது கிடையாது.

சிங்கள அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத அரவணைப்பு எல்லாம் அனைத்தையும் கெடுக்கும் அடிப்படையாகவே கொண்டவை என தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: