இந்திய மீனவர்களால் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள்

fishermannதெய்வேந்திரமுனை கடற்பரப்பிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 16ஆம் திகதி ”தில்ருக் புதா-6” என்ற படகின் மூலம் சென்ற 6 மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 20 பேர் கொண்ட இந்திய மீனவ குழுவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக குறித்த படகின் உரிமையாளர் ரொசான் தில்ருக் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த இலங்கை மீனவர்கள் சென்ற படகும், படகில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் இந்திய மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான படகு தற்போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர்  அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/CMRA7vO9g7k?list=PLXDiYKtPlR7MKaH_fkoaX4H5XBv40Q_S6

TAGS: