விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்: சிங்களவர்கள்

ஆயுதத்தின் மூலம் வென்றெடுக்க முடியாத தமிழீழத்தை அரசியலின் மூலமாக வெற்றிகொள்ளவே வடமாகாண முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் முயற்சிக்கின்றனர். நாட்டிற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிராக செயற்படும் விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை உடனடியாக நீக்கிவிட்டு சிங்கள தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுபல சேனா, சிங்கள ராவைய , ராவணா பலய ஆகிய சிங்கள பெளத்த அமைப்புகள் தெரிவித்தனர். சிங்கள மக்கள் மனங்களில் புகைந்துகொண்டிருக்கும் வெறுப்பையும், கோபத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பிவிட வேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் எச்சரித்தன.

பொதுபல சேனா, சிங்கள ராவைய , ராவணா பலய ஆகிய சிங்கள பெளத்த அமைப்புகள் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

-http://www.athirvu.com

TAGS: