‘படித்த,பணக்காரக் குடும்பத்தினர்தான் டாக்கா தாக்குதலை நடத்தியவர்கள்’

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த, மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் எல்லோரும் நன்கு படித்தவர்கள், செல்வந்தக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்று நாட்டின் ஆட்சியாளார்கள் கூறுகிறார்கள்.

Image copyrightAFP

இத்தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் வங்கதேசத்தவர்கள்தான் என்றும், அவர்கள் உள்ளூர் அமைப்புகளிலிடமிருந்தே ஆணைகளைப் பெற்றனர், இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அல்ல என்றும், வங்கதேச உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் கூறினார்.

இந்தத் தீவிரவாதிகளின் உடல்களின் படங்களையும் அவர்களின் பெயர்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபர் உயிர் தப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார்.

டாக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த இத்தாக்குதலில் 20 பணயக் கைதிகள் — அவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாட்டவர்கள் – கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலை தாம் தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு அமைப்பு கூறியிருக்கிறது.

-BBC