வெளிநாட்டு நீதிபதிகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!

europeபோர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டுநீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை.

அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைபொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவிதலைமையாளர் போல் கோட்ப்ரே Godfray தெரிவித்துள்ளார்.

உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது வெளிநாட்டுநீதிபதிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் என்று அவர் இலங்கையின்அரசாங்கம் செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: