ஆப்கான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், குறித்த தாக்குதலுக்கு சர்வசேத பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவமானது ஆழ்ந்த வேதனையும், கவலையும் அளிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com