பலூசிஸ்தான் மக்களை விஷவாயு செலுத்தி கொலை செய்தது பாகிஸ்தான்..? மோடிக்கு ஆதரவாக பேசியதால் நேர்ந்த அனர்த்தம்..!

Modi_balochஇந்திய சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி பலூசிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தானின் அடக்குமுறையை வன்மையாக கண்டித்திருந்தார். மோடியின் பேச்சிற்கு  பலூசிஸ்தான் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சுதந்திர தின உரையில் மோடியின் பாகிஸ்தான் எதிர்ப்பு பேச்சிற்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய சுதந்திர தினத்தன்றே பலூசிஸ்தானை சேர்ந்த 100 பேரை பாகிஸ்தான் ராணுவம் விஷவாயு செலுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாகவும், மேலும் 150 க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்று சித்திரவதை செய்து வருவதாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பலுசிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் பாகிஸ்தானின் இத்தகைய கொடூரச்செயல் போராட்டக்காரர்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

-http://www.athirvu.com