யாழ். முற்றவெளியை சென்றடைந்த எழுக தமிழ் பேரணி: அலையென திரண்டு வந்த மக்கள்..

யாழில், ஆரம்பமான எழுக தமிழ் பேரணி தற்போது யாழ், முற்றவெளி மைதானத்தினை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

அலையாக ஒன்று திரண்டுள்ளமக்கள் “தேச துரோகியே வெளியேறு”, ”“சிங்கள இராணுவமே வெளியேறு”, போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேரணியில் அலையென திரண்டு பொது மக்கள் ஒன்றுகுவிந்த வண்ணமே இன்னும் காணப்படுகின்றனர்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆயிரத்துக்கு மேற்பட்டோருடன் இந்த போராட்டத்தில் ஒன்றினைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/bDEXEw__L9E?list=PLXDiYKtPlR7Ow_NfLBTrXj5Q8mmoaomSD

TAGS: