விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு முள்ளிவாய்காலில் மரணித்துப் போன தமிழரின் ஒழுக்கம்

arianendranஒரு இனத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால் அந்த இனத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாக்க ஆலயங்களும் அதனூடான சமூகங்களும் முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

கடுக்காமுனை காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ விழாவில் கலைநிகழ்வு நேற்று மாலை தலைவர் லவன் தலைமையில் இடம்பெற்றது.

அங்கு சிறப்புரையாற்றிய அரியநேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில் கல்வியுடன் ஒழுக்கம் கட்டாயம் மாணவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும் கடந்த விடுதலைப்புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த ஒழுக்கம் இன்று இல்லாமல் இருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்காலுடன் ஒழுக்கமும் மரணித்து விட்டது.

இன்று வடகிழக்கு தமிழ் பிரதேசங்களில் மதுபான பாவனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கலாசார சீர்கேடுகளும் இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கின்றது. ஊடகங்களில்

Jaffna-Boys-06தினமும் வரும் செய்திகள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல்வன்முறை மற்றும் வாள்வெட்டு என சமூகசீர்கேடுகள் நிறைந்துள்ளதை அன்றாடம் சர்வ சாதரணமாக உள்ளது. இதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறான தீய விளைவுகளில் இருந்து எமது மக்களை மீட்ககூடியவிதமாக ஆலயங்கள் மூலமாகவும் கலாசார நிகழ்வுகள் மூலமாகவும் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். 2009 மே மாதம் பிற்பட்ட காலத்தில் வடகிழக்கு பகுதிகளில் போர் இடம்பெறவில்லை ஆனால் எமது நிலமும் வளமும் மாற்று இனத்தவர்களால் சத்தமில்லாமல் சூறையாடப்படுகின்றது. எல்லைக்கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றம் இடம்பெறுகிறது.

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் எல்லைக்கிராம் கெவிளியாமடுவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொண்டபோது கடந்த 2014ம் ஆண்டுநான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது

நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அதனை தடுத்தோம். அதுபோலவே எமது தாந்தாமலை முருகன் ஆலயத்தில் புத்தர் சிலையை அமைக்க இராணுவம் முயன்றபோது நேரடியாக அங்குசென்று அதனை தடுத்தோம்.

மட்டுநகர் மாநக எல்லையில் பிள்ளையாரடி பிரதான வீதியில் புத்ததுறவி ஒருவர் புத்தபெருமானின் சிலையை நிறுவமுயன்ற வேளை அங்கு சென்று அதனை தடுத்தோம். இவ்வாறு மகிந்த அரசின் இக்கட்டான காலங்களில் கெடுபிடி உயிர் அச்சுறுத்தல்களை முகம்கொடுத்து அரசியல் செய்தபோதும் எமக்காக ஒதுக்கப்பட்ட பன்முக நிதிமூலமாக நான் கடந்த பதினொரு வருடங்கள் ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவில் கல்வி செயல்பாடுகளுக்கு

வழங்கினேன்,.

அந்தவகையில் கடுக்காமுனை வாணிவித்தியாலய வளர்சிக்காக 2004ம் தொடக்கம் 2015 இவரையும் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் என்னால் நிதி ஒதுக்கப்பட்டது. அதை அதிபர்கள் உறுதிப்படுத்துவார்கள் எமது அரசியல் அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இல்லை. அதனைவிட எமது உரிமையைப்பெற வேண்டும் என்ற அந்த அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல் பணியையே நாம் முன் எடுக்கின்றோம். தற்போது

நில அபகரிப்பு மாற்று இனத்தால் மேற்கொள்ளப்படுவதை தமிழ் தேசியகூட்டமைப்பினராகிய நாம் அதை தடுப்பதற்கான முயற்சிகளை முடிந்தவரை மேற்கொள்கின்றோம். ஆனால் நிலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை. குறிப்பாக எமது மக்கள் அங்கு சென்று குடியேறக்கூடிய மனப்பாங்கும் எமக்குத் தேவை எம்மில் பலர் அவ்வாறு குடியேற முன்வருவதுல்லை. இந்த மனப்பாங்கு எமக்கு வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை என்பதற்காக கவலை கொள்ளவில்லை. தொடர்ந்தும் எமது மக்களின் உரிமை கிடைக்கும் வரை எனது அரசியல் செயல்பாடு

கொள்கையுடன் முன்எடுப்பேன் எனவும் அரியநேத்திரன் மேலும்கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: