இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் உள்ளது கடும் எச்சரிக்கை

001ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருபதாக நம்புவதாக பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் எச்சரித்துள்ளனர். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தானிய கடற்படை தளபதி இலங்கையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

-http://www.athirvu.com

TAGS: