விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யாரும் உயிரோடு இருப்பதை மஹிந்த விரும்பவில்லை: சிவ்சங்கர் மேனன்

shivshankar-menonதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் யாரும் உயிரோடு இருப்பதை மஹிந்த விரும்பவில்லை என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, இந்திய வெளிவிவகாரச் செயலராக பணியாற்றிய சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள ‘Choices: Inside the Making of India’s Foreign Policy’ என்ற நூலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

“போரின் இறுதிக்கட்டத்தில் எந்த வடிவத்திலான அனைத்துலக நடுநிலையையும், போர்நிறுத்தத்தையும் விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தனர். எனினும், புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதையோ, விசாரணைகள் செய்வதற்காக அவர்களை கைதிகளாகப் பிடித்து வைப்பதையோ மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை. அதன் மூலம், விடுதலைப் புலிகளின் தலைமை இன்னொரு போருக்குத் தயாராக முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ நம்பினார்” என்று சிவ்சங்கர் மேனன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: