லண்டனில் சிங்கள அமைப்பு: இது தமிழர்களுக்கு எதிராக போராடுமாம் இது எப்படி இருக்கு

லண்டனில் புதிதாக ஒரு சிங்கள அமைப்பை சிங்கள இனவெறியர்கள் சிலர் இணைந்து ஆரம்பித்துள்ளார்கள். ஹென்டன் சென்ரலில் உள்ள, பழைய இலங்கை உணவக உரிமையாளர், நீஸ்டனில் உள்ள பெரும் சிங்கள கடை உரிமையாளர்கள் என்று பல முக்கிய சிங்கள பண முதலைகள் இணைந்து இந்த சிங்கள அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இது முன்னர் எப்பவுமே உருவாக்கப்படவில்லை.

அதாவது மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கூட இவ்வாறு ஒரு அமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம். “உலக இலங்கை பேரவை” என்ற அமைப்பு கொழும்பில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. அதன் அனுசரணையோடு தான் லண்டனிலும் இந்த அமைப்பின் கிளை உருவாகியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இனிமேல் லண்டனில் நடக்கும் , தமிழர்களின் ஆர்பாட்டங்களை தடுக்கவும். இல்லையென்றால் அதனைக் குழப்பவும் இவர்கள் முனைவார்கள் என்று கூறப்படுகிறது.

லண்டன் , பிரான்ஸ் , ஜேர்மனி , இத்தாலி என்று பல நாடுகளில் இதுபோன்ற அமைப்பை கட்டியெழுப்ப சிங்களவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான விடையமாக நோக்கப்படவேண்டி உள்ளது. புலிகளோடு சமாதானம் பேசிக்கொண்டு எவ்வாறு ரணில் கருணாவை கிளப்பினாரோ. அதுபோல தற்போது பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளோடு இடியப்பம் சாப்பிட்டு சமாதானம் பேசிவரும் மங்கள மற்றும் ரணில். சைக்கிள் காப்பில் புலம்பெயர் தேசங்களில் சிங்கள அமைப்பை உருவாக்கி தமிழர்கள் போராட்டத்தை நசுக்கவும். மேலும் சிங்களவர்கள் போராட்டத்தை ஊக்குவிக்கவும் வழி வகுக்கிறார்கள்.

உண்மையில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வன் அவர்கள் ஒரு வசனத்தை அடிக்கடி கூறுவார். அதாவது மகிந்த வந்தால் யுத்தம் வெடிக்கும். ஆனால் ரணில் ஒரு நரியன். அவன் எங்களை மெல்ல மெல்ல அழித்துவிடுவான் என்று. அது தான் தற்போது ஓசையின்றி நடைபெற்று வருகிறது.

-http://www.athirvu.com

TAGS: