கடந்த 2016 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்ட உலக வரலாறு சிறப்பு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது அனைத்து நிர்மாணங்களும் முடிவுற்ற நிலையில் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது.
இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிற்ப வேலைகளும் மேற்கொள்ளபட்டுள்ளன.
இந்த வேலைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிற்ப வர்ண கலைஞர்களினால் செயல்படுத்தபட்டவையாகும்.
இதனை காண்பதற்கு உலகலாவிய ரீதியில் பக்தர்கள் நாளாந்தம் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்நு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட தற்போது அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com