17 வயதில் 30 க்கும் மேற்பட்ட கொலை! நாட்டையே உலுக்கிய சிறுவன் அதிரடி கைது

lettle beanதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 30 க்கும் மேற்பட்ட கொலைகள் செய்த சிறுவனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சுமார் நான்கு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 17 வயதான ‘Frijolito’ என்றழைக்கப்படும் little bean என்ற பயங்கர கொலைக்காரனை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

12 வயது முதல் little bean இரக்கமின்றி கொலை செய்ய ஆரம்பித்துள்ளான். போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவராக புகழ் தேட அவன் இவ்வாறு கொடூர கொலை செய்து வந்துள்ளான்.

சமீபத்தில் காலீ பகுதியில் உள்ள வணிக் மையத்தில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பொலிசார் அவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

பொலிசார் கூறியதாவது, little bean மிகவும் பயங்கரமான ஆபத்தான குற்றவாளி. தற்போது, அவன் சிறார் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளான். 18 வயதிற்கு பின் அவன் சிறைக்கு மாற்றப்படுவான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com