வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை: வடக்கு முதல்வரின் போராட்டம் வீண்

tamileelamவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்வித போராட்டங்களை முன்னெடுத்தாலும் அதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு இன்று முஸ்லிம் மக்கள் எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

மேலும், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருத்தல் வேண்டும். எனினும், அந்த பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் இன்று பாராளுமன்றம் இருக்கின்றது.

எனவே, வட கிழக்கு இணைப்பை பற்றி பேசாது மாற்று தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: