முல்லைத்தீவில் இருந்து ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் ஆதங்கம்!! நெகிழ்ச்சியான பதிவுகளுடன் அருட்தந்தை

mullaithivuஇலங்கை அரசு பின்நோக்கியே செல்வதாக காணாமல் போனோர் அமைப்பின் ஏற்றபாட்டாளரும் மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையுமான செபமாலை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், ஜெனிவா சென்றுள்ள அருட்தந்தை செபமாலை லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

அத்துடன், தொடர்ச்சியாக ஐ.நா சபையின் 34வது மனித உரிமைகள் கூட்ட தொடரில் கலந்து கொண்டிருக்கும் அருட்தந்தைசெபமாலை,

வடக்கு கிழக்கில் இடம் பெற்ற பல அழிவுகளின் ஆதாரங்களுடன் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பல வெளிநாட்டு மனித உரிமைகள் ஆர்வலர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

https://youtu.be/46f8DcUqZYQ

TAGS: