பிரித்தானிய அரசே இலங்கைக்கு துணைபோகாதே..! லண்டனில் வெடித்தது போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்ட தொடரில் இலங்கைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்க கூடாது என தெரிவித்து இன்று லண்டன் நகரில் சிலுவைப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 திகதி தொடங்கிய இந்த உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று பாரிய எழுச்சி போராட்டமாக உருவெடுத்துள்ளது. குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானிய பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் வேற்று நாட்டு மக்களையும் கவரும் வண்ணமாகவும்,

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை விளக்கி அதற்கான நீதியை கோரும்முகமாகவும் இச்சிலுவைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: