மீண்டும் யாழை அதிரவைத்த வாள்வெட்டு குழு..! ஆலயத்தில் தஞ்சமடைந்த பொது மக்கள்

jaffna_gangsவாள்வெட்டு குழுவின் அட்டகாசம் காரணமாக அச்சமடைந்த பொது மக்கள் ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்த சம்பவம் ஒன்று யாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினர் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும், வாள் வெட்டு குழுவினரை பொலிஸார் கைது செய்யவில்லை.

இதனையடுத்து, வாள் வெட்டுகுழுவினர் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தலாம் என அச்சமடைந்த அந்த பகுதி மக்கள், பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்னால் உள்ள ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்தனர்.

எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாள்வெட்டு குழுவிடம் இருந்து போதிய பாதுகாப்பை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: