யாழில் மீண்டும் ஆவா குழு : ஐந்து இளைஞர்கள் கைது

jaffna_gangsயாழ்ப்பாணம் பிரதேசத்தில் வைத்து ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலேயே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த ஐந்து பேரும் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TAGS: